உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்.. அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில், […]

ஃபோர்டு நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,800 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. […]

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களே தற்கொலை செய்து கொள்வதை பார்க்க முடிகிறது.. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் சென்னை ஐஐடியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில் 2-ம் ஆண்டு படித்து […]

அதானி விவகாரத்தில் பாஜக மறைப்பதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.. இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் […]

தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.. குறிப்பாக வங்கி தொடர்பான பணிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையும் குறைந்துவிட்டது.. இண்டெர்நெட் பேக்கிங், யுபிஐ ஆகிய முறைகளில் ஆன்லைனில் எளிதாக பண பரிமாற்றம் செய்ய முடிகிறது.. ஆனால் அதற்கு இணைய வசதி தேவை.. இந்நிலையில் இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC, ஆஃப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் திட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை போட்டிப் போட்டுக்க்கொண்டு அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு திட்டங்கள் எப்போது வரை இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. ரூ.349. ரூ.899. ரூ.2,999 ஆகிய திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.. ரூ.349 திட்டம் : காதலர் தினத்தை […]

வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது.. அம்பாலால் குழுமம், ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்ஸி உள்ளிட்ட 4 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் சுமார் 60 இடங்களில் […]

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நாள் இந்திய வரலாற்றின் கருப்பு நாளாக மாறிய தினம்.. ஆம்.. கடந்த 2019-ம் ஆண்டு இதே பிப்ரவரி 14-ம் நாளில் தான் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர்.. இந்த கொடூர தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. 2019 பிப்ரவரி 14-ம் […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக […]