நமது சமையலறைகளில் அலுமினியப் பாத்திரங்களின் பயன்பாடு மிகவும் பொதுவானது. அவை குறைந்த விலையில் கிடைப்பதாலும், விரைவாகச் சூடாவதாலும் பலர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்தப் பாத்திரங்களில் சமைப்பது உடல்நலத்திற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இவைதான் முக்கியக் காரணம். அலுமினியப் பாத்திரங்கள் ஏன் ஆபத்தானவை? அலுமினியம் ஒரு ‘வினைபுரியும்’ உலோகம். அதாவது, நாம் சமைக்கும் உணவில் உள்ள அமிலங்கள் மற்றும் […]
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் மற்றும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி (கே.ஆர்.பி.பி) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 28 வயதுடைய காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3 அன்று நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, பல்லாரி நகர […]
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் (Excise) வரியில் பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2026 பிப்ரவரி 1 முதல் […]
2024-25-ம் ஆண்டுக்கான C, D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை. வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட […]
தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 24-ம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த நவம்பர் மாதம் சிவகங்கையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் என அரசு பேருந்து விபத்து […]
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான நீரால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. அங்கு 6 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த மரணம் உள்ளூர் மக்களிடையே கோபத்தையும் போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் உள்ள மராத்தி மொஹல்லாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் தாய் சாதனா சாஹு, வீட்டு விநியோகக் குழாய் நீரில் கலக்கப்பட்ட பாலைக் குடித்த பிறகு, குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு […]
வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 31 அன்று ஷரியத்பூர் மாவட்டத்தில் 50 வயதான கோகன் தாஸ் என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகன் தாஸ் மீது நடந்த தாக்குதல் கோகன் தாஸ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கும்பலால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.. பின்னர் அவர் தீ […]
உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும், உடனடியாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. தலைவலி, முதுகுவலி அல்லது பல்வலி போன்றவற்றுக்கு இவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன. இருப்பினும், இந்த மாத்திரைகள் நமது உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் என்ன என்பதையும் அறிந்துகொள்வது அவசியம். வலி நிவாரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன? நமது உடலில் ஏதேனும் காயம் அல்லது அழற்சி ஏற்படும்போது, அந்தப் […]
தெலங்கானா மாநிலம் ஜகியால் மாவட்டம் மெட்பள்ளியில் குறிப்பாகப் பணக்காரர்களை குறிவைத்துச் செயல்பட்ட ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பெண்களைத் தங்கள் வலையில் சிக்க வைத்து, அவர்கள் தனிமையில் இருக்கும்போது நிர்வாண வீடியோக்களைப் படம்பிடித்து, அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறித்து வந்த கும்பலை மெட்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலை வழிநடத்தி வந்த ரவுடி ஷீட்டர் கோருட்லா ராஜு உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து […]
தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் தற்போது நிலவும் கட்சி தாவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நோக்கி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் நீண்ட காலம் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெக-வில் […]

