டெல்லி உயர்நீதிமன்றம் பெற்றோர் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தாய் அதிகமாக சம்பாதிக்கிறார் என்பதற்காக மட்டும், தந்தை தனது குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா இந்த தீர்ப்பை வழங்கினார். கீழ்நீதிமன்றம் விதித்த இடைக்கால பராமரிப்பு உத்தரவை எதிர்த்து ஒரு தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று சிறுவயது குழந்தைகளுக்காக மாதம் […]
இதய நோய் என்பது இந்த நாட்களில் பெரும்பாலான மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இளம் வயதினர்கூட திடீர் மாரடைப்பால் சரிந்து விழுகின்றனர். உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தீவிர உடற்பயிற்சிகளோ அல்லது கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளோ தேவையில்லை. தினமும் கடைப்பிடிக்கப்படும் சிறிய பழக்கவழக்கங்களும் பல நன்மைகளைத் தருகின்றன. புத்தாண்டு அன்று ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? அப்படியானால், 2026-ல் நீங்கள் தினமும் பின்பற்றக்கூடிய 5 இதயப் பராமரிப்பு குறிப்புகளை […]
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில், குறைந்த விலையில் எஃகு (Steel) பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் எஃகு தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சில குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீது 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி சுங்கவரி விதிக்கப்படுகிறது. இந்த சுங்கவரி முதல் ஆண்டில் 12 சதவீதமாக இருக்கும். இரண்டாம் ஆண்டில் இது 11.5 சதவீதமாக […]
உத்தரகாண்ட் மாநிலம் பிபல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) திட்டப் பகுதியில் சுரங்கப்பாதைக்குள் இரண்டு லோகோ ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு, பணி மாற்றத்தின் போது நடந்தது. இரண்டு ரயில்களிலும் சுமார் 108 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு ரயில் மற்றொரு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2025-ம் ஆண்டிற்கான அரசின் பொருளாதார சீர்திருத்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆக உள்ளது. இந்திய பொருளாதாரம் இதே வேகத்தில் வளர்ந்தால், 2030க்குள் ஜெர்மனியையும் முந்தி உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் இந்தியாவின் GDP 7.3 டிரில்லியன் டாலர் […]
புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது அந்த செய்தியில் “மனைவியின் அனுமதி இல்லாமல் மது குடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை” என்று கூறப்பட்டுள்ளது.. இந்த தகவல், பாரதீய ந்யாய சன்ஹிதா (BNS) 2023-இன் ஒரு பிரிவை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய குற்றச் சட்டம் 2024 ஜூலை 1 முதல் […]
2025-26 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள். இதற்குப் பிறகு, உங்கள் வருமான வரிக் கணக்கில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. 2024-25 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான உங்கள் வருமான வரிக் கணக்கில் நீங்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளைத் திருத்துவதற்கு இன்று (டிசம்பர் 31) தான் உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. இந்தச் சூழலில், வருமான வரித் துறை கடந்த சில வாரங்களாக […]
நம் வாழ்வில் வீடு மிகவும் முக்கியமானது. பல வருட கடின உழைப்பிற்குப் பிறகு தாங்கள் கட்டிய சொந்த வீட்டில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அதனால்தான் பலர் வீடு கட்டும்போது வாஸ்து விதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால், இடத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில் சில இடங்களில் செய்யப்படும் சிறிய தவறுகள் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பலர் அறிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடம் […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தலா ஒரு தேர்வின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட தேர்வு தேதிகள் 10 ஆம் வகுப்பு: மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த திபெத்தியன், ஜெர்மன், தேசிய கேடெட் படை (NCC), போடோ, போதி, ஜப்பானியம், பூட்டியா, ஸ்பானிஷ், காஷ்மீரி, மிசோ, […]

