தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. முன்னாள் எம்.பிக்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோரை தொடர்ந்து அதிமுகவின் […]
நவம்பர் மாதம் நிறைவடையப் போகிறது.. நவம்பர் 30 ஆம் தேதிக்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. சில முக்கியமான நிதி பணிகளை முடிப்பது மிகவும் முக்கியம். இந்தப் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படாவிட்டால், நீங்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உங்களிடம் அதிக அபராதம் கூட விதிக்கப்படலாம். எனவே, இந்த முக்கியமான பணிகளின் பட்டியலை சரியான நேரத்தில் கவனிப்பது மிகவும் முக்கியம். ஏஞ்சல் ஒன்னின் கூற்றுப்படி, வரி இணக்கத்தை சரியான நேரத்தில் முடிப்பது […]
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏவாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.. கடந்த 2005-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பெரியபாளையம் அருகே தானாகுளத்தில் உள்ள அவரின் வீட்டின் கதவை உடைத்து எம்.எல்.ஏ சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரின் மனைவி மகன்களை தாக்கி அவரின் வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை […]
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் வாய்ப்பை வழங்குகிறது. “உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்” என்ற தலைப்பில் ஒரு லோகோ வடிவமைப்புப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம், நுகர்வோரின் உரிமைகளை நினைவூட்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் தயாரிப்புகளை கவனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு லோகோவை உருவாக்குவதாகும். லோகோ மூன்று முக்கிய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்: “நுகர்வோரை மேம்படுத்துதல்”, […]
இண்டஸ்ரியல் ஸ்டார்ச் (Industrial starch) என்பது பல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும் இது தற்போது முக்கிய சுகாதார ஆபத்து என எச்சரிக்கை எழுப்பப்படுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த சரும நிபுணர் டாக்டர் பூஜா ரெட்டி, இந்த பொருள் சுத்திகரிக்கப்பட்ட மாவு (refined flour) என்பதைக் காட்டிலும் அதிகமாக தீங்கு விளைவிப்பதாகவும், உடலில் அழற்சி (inflammation) ஏற்படுத்தவும், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரவும், வகை 2 […]
நீண்டகால உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று காலமான பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நடிப்பு வாழ்க்கையில் அவரது பாரம்பரியத்தையும் மறக்கமுடியாத நடிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி முர்மு, தர்மேந்திராவின் பணி இளம் தலைமுறை கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.. திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில் “ மூத்த நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ தர்மேந்திர ஜியின் மறைவு இந்திய […]
தென்காசியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம். இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஐந்து பெண்கள் […]
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.. 4 இடங்களில் அதி கனமழை, 76 இடங்களில் கனமழை பதிவாகி இருகிறது.. குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.. இது 24 மணி நேரத்தில் மண்டலமாக வலுப்பெறும்.. அதற்கடுத்த 48 […]
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், இந்த கோர விபத்து […]
பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, இன்று தனது 89 வயதில் மறைந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அவர் மறக்க முடியாத சினிமா வரலாறை மட்டும் அல்ல, கடின உழைப்பில் உருவாக்கிய பெரும் செல்வத்தையும் விட்டுச் சென்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது நீண்டகால திரைப்பட வாழ்க்கையில், சுமார் ரூ.450 கோடி மதிப்புள்ள ஒரு பேரரசை உருவாக்கி உள்ளார்.. மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மொத்த சொத்து […]

