பாலிவுட்டின் ஹீ-மேன் என்றும் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, தனது 89 வயதில் நவம்பர் 24, 2025 இன்று காலமானார். இந்த செய்தியை நடிகரின் குடும்ப செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். ஷோலே நடிகர் இந்த மாத தொடக்கத்தில் 10 நாட்களுக்கும் மேலாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை முன்னேறிய நிலையில் , சிகிச்சைக்காக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தர்மேந்திரா காலமானார் டிசம்பர் 8 ஆம் […]

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் […]

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், நேருக்கு […]

பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விஜய்யின் அரசியல் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.. பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விஜய் ஒரு தனிப்பட்ட நபராக ஆபத்தானவர் இல்லை.. அவர் ஒரு தனிநபராக அமைதியாக இருப்பார், யாரிடமும் பேசமாட்டார். திரையுலகில் அவர் அமைதியானவர்.. ஆனால் அவர் அரசியலுக்கு வரும் போது ஆபத்தானவர்.. ஒரு தலைமைப் பொறுப்பேற்று வருகிறார்.. நடிகராக இருக்கும் தனக்கு கிடைத்த செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்தி, […]

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் அவருக்குப் பதிலாக செலுத்தியிருந்தது. இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை, விஷாலின் எதிர்கால படங்களின் டிஜிட்டல், ஒளிபரப்பு உள்ளிட்ட முதன்மை உரிமைகள் லைகாவுக்கு சொந்தமாக இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சில பட உரிமைகளை மூன்றாம் […]

இப்போது டிஜிட்டல் யுகம். தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், பரிவர்த்தனைகளுக்கு மக்கள் டிஜிட்டல் சேவைகளையும் தேர்வு செய்கிறார்கள். காய்கறிகள் வாங்குவது முதல் லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் வரை, UPI அல்லது பிற ஆன்லைன் சேவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்னும் நமக்கு பணம் தேவை. எனவே, UPI சகாப்தத்தில் கூட, மக்கள் ATM-களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பணம் எடுத்த பிறகு மக்கள் மீண்டும் மீண்டும் கேன்சல் பட்டனை […]

தூங்குவதற்கு முன் மக்கள் தங்கள் அறைகளில் உள்ள விளக்குகளை அடிக்கடி அணைத்துவிடுவார்கள். இருப்பினும், சிலர் இரவில் விளக்குகளை அணைக்க மாட்டார்கள். விளக்குகளை அணைத்துவிட்டு தூங்க வேண்டுமா அல்லது எரிய வைக்க வேண்டுமா என்று உங்களுக்குத் தெரியுமா? ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. தூங்கும் போது விளக்குகளை அணைக்க வேண்டுமா அல்லது எரிய வைக்க வேண்டுமா என்று பார்க்கலாம்.. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனித தூக்கம் […]

கரூர் கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆதவ், புஸ்ஸி ஆனந்த் நிர்மல் ஆகியோர் ஆஜரானார்கள்.. கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் […]

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி கவாய் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, அரசியல் சட்டத்தின் 124(2)வது கட்டளையின் கீழ் சூரியகாந்தை குடியரசு தலைவர் நியமித்திருந்தார். வழக்கமான மரபை பின்பற்றி இந்த பரிந்துரை வழங்கப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த் : முக்கிய தீர்ப்புகளில் பங்கு பல முக்கியமான மற்றும் வரலாற்றுப் பிரசத்தி பெற்ற […]

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படையான எல்லைப் படை (FC) தலைமையகம் மீது இன்று துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர்.. இதற்கு அநாட்டு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியது. பல ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் அந்த மையத்தை குறிவைத்ததாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், இது FC பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு […]