தமிழ்நாட்டில் அடுத்தடுத்து டெக் சேவை நிறுவனங்கள் புதிதாக தனது வர்த்தக அலுவலகத்தை திறந்து வரும் வேளையில், கடந்த வருடம் மதுரையில் அமெரிக்க நிறுவனமான pinnacle இன்போடெக் அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது. மதுரை ஐடி துறை வளர்ச்சியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் pinnacle இன்போடெக் நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கத்தரி வெயில் முடிவடைந்தாலும், கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்களும் வாகனம் ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே கோடை வெயிலின் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு நேரத்தில் திடீரென கருமேகங்கள் […]
மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ள படம் ‘லியோ’ . இதில் விஜய் தொடர்பான காட்சிகள் நேற்று முடிவடைந்த நிலையில், படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளது. இதனிடையே விஜய் தனது 68வது படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]
தமிழ் சினிமா விமர்சகர்களில் மிகவும் முக்கியமான நபராக இருப்பது ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் சமீபத்தில் வெளியான படமான பம்பர் படம் குறித்த விமர்சனத்தை வழக்கம்போல் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்படத்தில் வெற்றி, பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நராயணன் ஆகியோருடன் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜி.பி. முத்துவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ள […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே லைக்கா கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெல்லை அணி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திண்டுக்கல் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 46 பந்துகளில் 76 ரன்களுக்கு பெவிலியன் […]
கும்பகோணம் பாலக்கரையில், பள்ளி தீவிபத்தினால் உயிரிழந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் இளைஞர் அரண் அமைப்பு சார்பில் ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, இளைஞர் அரண் தமிழ்நாடு அமைப்பாளர் சைமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க அமைப்புச் செயலாளர் மகிழன், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கல்வி பாதுகாப்பு, அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கான உரிமைகள், […]
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள தென்னம நல்லூர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்சிற்பங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் தென்னமநல்லூர் பகுதியின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டபோது கி.பி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டது. “மதுரையை நாயக்கர்கள் ஆட்சி […]
தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் எந்தெந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்தெந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசு செய்கிறது. தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசு பஸ்களை இயக்கி வருகிறது. சிறு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு […]
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் எக்ஸ்டர் , இன்று (ஜூலை 10) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளது. மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் கார், 6 மோனோடோன் மற்றும் 3 ட்யூயல் டோன் என மொத்தம் […]
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இருக்கும் ரியல்வே துறை இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களில் ஏசி சேர் கார், எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ் டிக்கெட்-களின் விலையை 25 சதவீதம் வரையில் திடிரென குறைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா.? இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை விரைவில் […]