SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசசன் நமக்கு அளித்த முதல் உரிமை.. வாக்களிப்பது என்பது உரிமை இல்லை.. அது தான் வாழ்க்கை.. SIR மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது.. […]
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]
தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக செயல்படுவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இதுறித்து திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை […]
ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு சில சக்திவாய்ந்த கிரகங்களின் சுப சேர்க்கைகளால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு உருவாகும் முக்கிய சுப யோகங்களில் ஒன்று கஜலட்சுமி ராஜயோகம். குரு பகவானும், செல்வம் மற்றும் சுகத்தின் அடையாளமான சுக்கிர கிரகமும் ஒரே ராசியில் இணையும்போது இந்த அரிய யோகம் உருவாகிறது. இந்த யோகம் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் மகத்தான ஆசீர்வாதங்களை சில ராசிகளுக்குக் கொண்டு வந்து, அவர்களின் […]
தமிழ்நாட்டில் தள்ளுவண்டி கடைகள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்கள் அதிகம் நாடும் உணவக வடிவமாக வளர்ந்து வருகின்றன. குறைந்த செலவில், சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்குவதால் இவை பொதுமக்களின் தினசரி தேவையை பூர்த்தி செய்கின்றன. இட்லி, தோசை, பொறி வகைகள் முதல் வட இந்திய, சீன உணவுகள் வரை பல்வேறு வகைகள் தள்ளுவண்டிகளில் கிடைப்பதால், வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு இவை விரைவான மற்றும் மலிவான உணவு […]
அவசரகாலத்தில் பணம் தேவை எனில் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறுவது ஒரு வசதியான வழி. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதன் அபாயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. ரொக்க முன்பணம் என்பது ஏடிஎம் அல்லது வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் செயல்முறையாகும். இது வழக்கமான ஷாப்பிங்கிலிருந்து வேறுபட்டது. ஷாப்பிங்கில், பொருட்கள் வாங்கப்படுகின்றன, ஆனால் […]
பீகார் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பீகாரில் உள்ள தனது கிளர்ச்சித் தலைவர்கள் மீது பாஜக தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. பீகாரைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மின் அமைச்சர் பதவியை வகித்த இவர், முன்னாள் மத்திய உள்துறை செயலாளராகவும் இருந்தவர், கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து […]
பலர் தங்கள் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கோழிக்கறியை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இருப்பினும், இது கெட்டுப்போக வேண்டிய உணவு என்பதால், பாதுகாப்பாக சேமிக்கப்படாவிட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களில், பச்சைக் கோழியை குளிர்சாதன பெட்டியில் எவ்வளவு நேரம் வைக்கலாம், அதை எப்படி சேமிப்பது, என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். பச்சைக் கோழியில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். […]
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி […]
நேற்று விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.. எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம்.. இன்று இருக்கும் காங்கிரஸ் நேரு காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது.. இன்று இருக்கும் காங்கிரஸ் நாட்டை காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்.. தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ்.. நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் […]

