ஜம்மு காஷ்மீர் போலீசார், ஜெயிஷ் இ முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) எனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கிடையிலான தீவிரவாத வலையமைப்பை கண்டுபிடித்துள்ளது.. இதே நடவடிக்கையின் போது ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் நடந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதில் பாரிதாபாத் வெடிபொருள் மீட்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி மருத்துவரும் […]

காபி என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். பலரும் அதை வெவ்வேறு காரணங்களுக்காக குடிக்கிறார்கள். சிலர் காலை எழுந்தவுடன் விழித்தெழுவதற்காக அதை குடிப்பார்கள்; சிலர் முழு நாளும் சுறுசுறுப்பாக இருக்க பல கிண்ணங்கள் குடிப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாறு அடிக்கடி காப்பி குடிப்பது உடலுக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும். காபி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் ஒரு கப் காபி காலை நேரத்தில் ஆற்றலை அதிகரிக்க உதவலாம். […]

புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் தற்போது “பாக்டீரியா” சிகிச்சை என்ற புதிய துறையில் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. தற்போதைய சிகிச்சைகளின் வரம்புகள் பல புற்றுநோய்களைச் சிகிச்சையளிப்பது கடினம். சில சமயங்களில் சிகிச்சை மருந்துகள் புற்று திசுக்களுக்குள் புக முடியாது. சில வேளைகளில் புற்றுநோய் தானாகவே நோயெதிர்ப்பு அமைப்பின் சில பகுதிகளைத் தடுக்கிறது, இதனால் மருந்தின் விளைவு குறைகிறது. மேலும், புற்றுநோய்கள் மருந்துகளுக்கு […]

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. இதனிடையே தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த […]

பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள் நம்மில் பலருக்கு அன்றாடத் தேவையாகிவிட்டன. காலையில் பாலுடன் கலந்த தேநீர் அல்லது காபியுடன் நம் நாளைத் தொடங்குகிறோம். மதிய உணவிற்கு தயிர், மாலையில் மீண்டும் தேநீர், படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் பால் – பால் பொருட்கள் நம் உணவின் இயற்கையான பகுதியாக மாறிவிட்டன. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், […]

தங்க கடன்களைப் போலவே, விரைவில் மக்கள் தங்கள் அவசர நிதி தேவைகளுக்காக வெள்ளிக்கு ஈடாக கடன்களைப் பெற முடியும். உங்கள் வீட்டில் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் இருந்தால், அவை இப்போது உங்களுக்கு விரைவாக நிதி திரட்ட உதவும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, வெள்ளி அடமானக் கடன்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. RBI தனது […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை சமீபத்தில் […]

புதுக்கோட்டையில் ரூ.767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்புகளை எடுத்துரைத்த முதலமைச்சர், அந்த மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.. புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் அறந்தாங்கி வட்டம் நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.. கீரமங்கலப் […]

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.. இந்தப் படத்தை பிரபல நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதலில் தனது படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் ஜேசன் தடுமாறி வந்தார்.. கவின் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது.. இறுதியில் நடிகர் சுந்தீப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார்.. இந்த படம் தற்காலிகமாக “JS 01” என்று அழைக்கப்பட்டு வந்தது.. […]

2002ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அபினய். தமிழில் முன்னணி நடிகராக அவர் மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தனது முதல் படத்தை தொடர்ந்து ஜங்க்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சில காரணங்களால் திரைத்துறையில் இருந்து விலகி, சில விளம்பரங்கள் மற்றும் பின்னணி குரல் (dubbing) துறைகளில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அபினய் சரியாக பட வாய்ப்புகள் […]