தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின்.முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின். தமிழில் […]

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறியின் விலையும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. காய்கறிகளின் விலை உயர்வு என்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வாங்கிய காய்கறிகளை, தற்போது 2 மடங்குக்கும் கூடுதலான விலையை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சின்ன வெங்காயம், தக்காளி, பீன்ஸ், […]

இந்தியாவில் தன்னுடைய முதல் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐ-கோவைஸ் மொபிலிட்டி (iGowise Mobility) நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் அதன் முதல் வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஐ-கோவைஸ் மொபிலிட்டி நிறுவனம் தன்னுடைய முதல் தயாரிப்பாக இ-பைக் ரக பெய்கோ எக்ஸ்4 (BeiGo […]

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.   மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் […]

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து நிற்கிறது.   இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியிட்டது, இந்த அறிக்கையில் இந்நிறுவன தலைவரும், நிறுவனருமான கெளதம் அதானி அமெரிக்காவைச் சேர்ந்த ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக […]

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்றைய தினம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் அவசர அவசரமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கபட்டது. சூறைக்காற்றில் சிக்கியபோது, ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் குலுங்கியுள்ளது. அப்போது மம்தா பானர்ஜியின் கால் தசைநார் பாதிக்கப்பட்டது. இதனால் […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் மயானமொன்று உள்ளது. அந்த மயானத்தில் கம்பி வேலி அமைத்து தென்னை மரம், மாமரம், பலாமரம், கொய்யா மரம் போன்ற நலனும் நிழலும் தரும் மரங்களை கடந்த 16 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார் விவசாயியொருவர். இதுபற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அந்த மரங்களை எல்லாம் அர்ஜுனன் (70) என்ற விவசாயிதான் நட்டு பராமரித்து […]

சமூகவலைதளங்களில், ஜெயிலில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய கைதியின் வீடியோ வேகமாக பரவிய நிலையில் கைதிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்டும் எவ்வித அச்சமும் இல்லாமல் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் நடந்த பின் இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் இருந்து செல்போனில் பேசியவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை சட்டப்பிரிவு […]

சென்னை மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. இதே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கடும் வெயிலில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதிலும் உள்ளது. இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி, […]

காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வு கதையை எடுத்த ராகவா லாரன்ஸ், ரொம்ப வித்தியாசமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா கேரக்டரின் நடித்த சரத்குமாரின் வளர்ப்பு மகளாக அந்த படத்தில் நடித்தவர் தான் திருநங்கை திவ்யா. இவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திவ்யா தன்னுடைய பேட்டியில் […]