வரலாறு காணாத வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இது முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையுமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.. நீண்ட கால இலக்கு கொண்ட முதலீட்டாளர்கள், தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும்போது, ​​மொத்தமாக வாங்காமல், பகுதி பகுதியாக வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வகைப்படுத்தல் மற்றும் மூலதனப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக தங்கம் ஒரு மூலோபாயச் சொத்தாகத் தொடர வேண்டும் என்று நிபுணர்கள் […]

இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையக் குற்றவாளிகள் பெரும்பாலும் அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். இந்த வழிகள் மூலம் தொடர்புகொண்ட பிறகு, தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தொலைபேசிகளில் ஊடுருவ முயற்சிக்கின்றனர். வ்வாறு ஊடுருவி லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர். இணையக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் […]

திருவள்ளூரில் அரசுப்பள்ளியில் சுவர் இடிந்து விழந்ததில் மாணவன் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் […]

திருவள்ளூரில் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோதக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், […]

இமயமலை நாடான நேபாளம், ரூ.200 மற்றும் ரூ.500 உள்ளிட்ட உயர் மதிப்பு இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு தசாப்த கால தடையை நீக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகதீஷ் காரெல், ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய நோட்டுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக வலியுறுத்தினார். இருப்பினும், அவர் […]