கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை […]
திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழந்தார். திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது ஜீப் டயர் வெடித்ததால், வாகனம் நிலைகுலைந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். அரசு பணிக்காக ஜீப்பில் சென்ற போது கோட்டாட்சியர் விபத்தில் சிக்கிய […]
ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் அருகே நடந்த காதல் தகறாறு விவகாரத்தில் 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை கைது செய்து […]
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி வந்த நிலையில் தற்போது யூ டர்ன் அடித்துள்ளார். அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கூறிய ஒரு இராணுவ மோதலை நிறுத்த முடிவு செய்ததற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார். இதற்கு முன்பு வரை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – […]
சென்னையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை சில […]
சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் […]
An IndiGo flight carrying 180 people made an emergency landing in Delhi due to a mid-air technical snag.
Annamalai has accused the DMK of underestimating terrorist threats.
பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர் என்று பாராட்டிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி “ஒரு அற்புதமான மனிதர்” என்று பாராட்டி உள்ளார். மேலும் மோடி உடன் முந்தைய இரவு தொலைபேசியில் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். […]
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் […]

