ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, 4 முக்கிய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும் வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது 4 பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. இந்தக் குறைப்புக்குப் பிறகு, வீடு, வாகனம் […]
அமெரிக்காவில் Dusting சேலஞ்ச் என்ற வைரல் ட்ரெண்ட் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது பல ட்ரெண்ட்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டஸ்டிங் (Dusting) எனப்படும் வைரலாகி வருகிறது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த ஆன்லைன் ட்ரெண்டை செய்து பிரபலமாக நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத […]
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் பூர்வ ஆய்வு தேவை என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தரமான பதிலடி கொடுத்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். […]
இந்தியாவில் மிகப்பெரிய தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நாட்டில் ஒரு புதிய தங்கச்சுரங்கம் செயல்படத் தொடங்க உள்ளது. எங்கு தெரியுமா? இந்தியாவில் நிலத்தடியில் அதிக தங்க இருப்பு இல்லை, அதனால்தான் வேறு சில நாடுகளைப் போல இங்கு தங்கம் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால் சமீபத்தில், இந்தியாவில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஒரு புதிய தங்கச் சுரங்கம் செயல்படத் தொடங்க […]
மீண்டும் ஏன் கோவிட் பரவுகிறது? புதிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கோவிட் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தியா இன்னும் ஒரு பெரிய புதிய அலையைப் பதிவு செய்யவில்லை என்றாலும், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் கவலையைத் தூண்டுகின்றன. இந்தியாவின் தற்போதைய அதிகாரப்பூர்வ எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. […]
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 5 உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக நம்மில் பலரும் அதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுகிறோம்.. இருப்பினும், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது அவற்றை நச்சுத்தன்மையடையச் செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா.. மீண்டும் சூடுபடுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களை உருவாக்க வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் விழிப்புடன் இருப்பதும், எந்த […]
இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 […]
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவுமுறை மாற்றங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பிரபல மருத்துவர் பகிர்ந்து கொண்டார். நமது உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள், கூடுதல் திரவம் மற்றும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை நீக்குதல், நீர், உப்புகள் மற்றும் நமது இரத்தத்தில் உள்ள சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரித்தல் ஆகியவை அடங்கும். எனவே, சிறுநீரக செயல்பாட்டை […]
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான […]

