தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சுதாகர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு மாணவர் திருப்பதி வெங்கடேஷ், பனை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் காட்சன் சாமுவேல், ஆத்தூர் ராஜசேகரபாண்டியன் என ஒரு குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆத்தூர் குளம் ஆழப்படுத்தும் பணி நடந்தது. அங்கு இந்த குழுவினர் […]
திருச்சி திருவெறும்பூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசனின் 75வது பிறந்தநாள் விழா நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் […]
உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள தேவ்ராலா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சன் குமார் (27). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் டூ-விலர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் என்பவர் வீடு உள்ளது. கடந்த மே 14ஆம் தேதி காலையில், அச்சன் குமாரின் குழந்தை பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது சுரேந்திர பிரமுக் […]
வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வந்தப் படம் ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தில் ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், வரும் 16-ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் […]
முன்னதாக வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா.. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்துவதைப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 25 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் எல்லாம் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு பாராட்டுக்கள் என்று அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார். அண்ணாமலைக்கும் எல் முருகனுக்கும் உறவு நன்றாக இல்லை என்று கூறப்படும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அண்ணாமலையை […]
சேலம் புதிய பேருந்து நிலையம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சீரமைத்துக் கட்டப்பட்டது. புறநகர், மற்ற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பேர் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மக்களின் பயன்பாட்டிலுள்ள பேருந்து நிலையத்தில், பயணிகள் அமருவதற்கான நாற்காலிகள் இல்லை. ஏற்கெனவே இருந்த நாற்காலிகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், உள்ளே பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் பயணிக்கக்கூடிய […]
இந்த மாத தொடக்கத்தில், வாட்ஸ்அப் எமோஜி பாருடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது சில பீட்டா சோதனையாளர்களுக்கு அந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஐ ஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு ஈமோஜி பாருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை வெளியிட்டுள்ளது. ஆண்டிராய்டு பயனர்கள் 2.23.12.19 வெர்ஷனையும் ஐ ஓஎஸ் பயனர்கள் 23.12.0.70 வெர்ஷனையும் இன்ஸ்டால் செய்தால் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்தின் […]
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11-ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் […]
லோகாண்டோ வலைத்தளம் மூலமாக Call Girls and call Boys available என்ற போலியான விளம்பரத்தை நம்பி சில இளைஞர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணங்களை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி, பல்வேறு வங்கி கணக்கு மூலம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். மேலும் தங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக call boys வேலைக்கு ஆசைப்பட்டு வரும் […]
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வாருவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தூர்வாரும் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடகாட்டில் அமைந்துள்ளது பரப்பலாறு அணை. பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் சங்கமிக்கும் இடம் தான் இந்த அணை. தமுக்குப் பாறை, தட்டப்பாறை எனும் பிரம்மாண்டமான பாறைகளுக்கு நடுவே பள்ளத்தை நோக்கி பாய்கிறது பரப்பலாறு. அந்த […]