திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார்.  எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு செய்ததை எண்ணி எதிர்க்கட்சிகளே வியந்தன. ஆட்சி அமைந்தது முதல் இரவு, பகல் பாராது […]

மதுரை திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு – வேலாயி தம்பதியினர் இவர்களுக்கு 6 மகன்களும் 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது. 98 வயதான வேலாயி அம்மாளுக்கு அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து கூட கோயிலில் உள்ள வேலாயி இல்லத்தில் பிறந்தநாள் […]

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை துன்புறுத்தியதாக, தற்போதைய சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார். ககன்தீப் சிங் பேடி சென்னை மாநாகர ஆட்சியராக இருந்ததன் மூலம், பொதுமக்களிடையே நன்கு பரிட்சையமானவர். வெள்ளம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் அதிவேக செயல்பாடு, பஞ்சாபை சேர்ந்தவராக இருந்தபோதும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசும் தமிழ் ஆகியவற்றின் மூலம் சமூக வலைதலங்களிலும் பாராட்டுக்களை […]

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றியை குவித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யும் இணைந்துள்ள படம் “லியோ”. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினை எடுக்காததற்கு, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் […]

மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம். வழக்கமாக, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று […]

“ஆதிபுருஷ்” படம் ராமாயணத்தில் வரும் அனுமனையும் மையப்படுத்தியது. கட்டாயம் அனுமனும் படத்தை பார்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், படத்தை வெளியிடும் தியேட்டர்களில் அனுமனுக்காக கட்டாயம் ஒரு சீட் ஒதுக்கவேண்டும்” என்று ஆதிபுருஷ் படக்குழு அறிவித்திருக்கிறது. சாமி படத்துக்கு ஒரு சீட் ஒதுக்குறமாதிரியே லாரன்ஸ், சுந்தர்.சி மாதிரி இயக்குனர்கள் பேய் படத்துக்கு ஒரு சீட்டை ஒதுக்கினா தியேட்டருக்கு வர்றவங்களோட நிலமை என்னாகுறது? என்று இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் இன்னொரு பக்கம் […]

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் ராஜ் என்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற போது இன்று அதிகாலையில் பல்லடத்தில்  தாராபுரம் பிரிவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரிக்கு எதிரே கோவையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக் குமார் ஆகிய இருவரும் லாரியை உரசுவது போல காரை இயக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் கேஷ்வன்ராஜ் […]

மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோவில் திருவிழாக்களின் போது, எந்த தனிநபரும் கமிட்டி அமைக்க கூடாது என ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் […]

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ 1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஸ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார். இதே போல் கலைஞர் […]