ஹைதராபாத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் குகட்பள்ளியில் உள்ள ஒரு கடையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை ​​உட்கொண்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுமார் 15 பேர் ஹைதராபாத்தின் ராம்தேவ் மருத்துவமனையில் குறைந்தது அனுமதிக்கப்பட்டதாக கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது. […]

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் வெளியான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக கேட் கீப்பரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.. அவர் வடமாநிலத்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாததும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இந்த நிலையில், கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து […]

மதுரையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. மதுரையில் வைகை தென்கரையின் ஓபுலா படித்துறை பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.. இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளது.. தகவலறிந்து பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.. இந்த விபத்தில், குடோனில் […]

பொதுமக்கள் 17 குறிப்பிட்ட காலாவதியான மருந்துகளை குப்பையில் வீசுவதற்குப் பதிலாக டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்று CDSCO எச்சரித்துள்ளது. இந்தியாவின் உச்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், 17 குறிப்பிட்ட காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை குப்பையில் வீசுவதற்குப் பதிலாக அவற்றை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சக்திவாய்ந்த […]