தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை […]
இந்தியாவில் ஏற்றுமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் 13.84% அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் முந்தைய 2021-22 ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 13.84% அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 770.18 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. மேலும் சரக்கு ஏற்றுமதி 2021-22 ஆம் நிதியாண்டில் 422 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. இது […]
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் உதவி காவல் ஆணையர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது . தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்தவர் வசந்தகுமார். மதுரை உதவி காவல் ஆணையராக பணி புரிந்து பின் ஓய்வு பெற்றார். பதவியில் இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, அவருக்கு எதிராக, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி நேற்று காங்கிரஸில் இணைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடகாவின் கட்சிப் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்துப் பேசிய பிறகு லட்சுமண் சவடி கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. […]
டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்தார் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் […]
Mygov இணையத்தில் இலச்சினை(Logo) மற்றும் மேற்கோள் வாசக வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (டிஏஆர்பிஜி) அதன் மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணைய தளத்திற்கு, மனதில் நிற்கும் வகையிலான இலச்சினை(Logo) மற்றும் மேற்கோள் வாசகத்தை வடிவமைப்பதற்கான போட்டியை MyGov தளத்தில் நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான […]
மத்திய அரசில் 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும், வயது வரம்பு 01.08.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும்.வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள் […]
யூனியன் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த […]
நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது. 2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 160.17 சதவீதம் அதிகரித்து 2022-23 […]
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]