திரைப்பட நடிகை உத்ரா பாக்கர் புனே மருத்துவமனையில் காலமானார் பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகை உத்ரா பாக்கர் புனே மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மிருணாள் சென்னின் ‘ஏக் தின் அச்சனக்’ திரைப்படத்தில், வீடு திரும்பாத ஒரு பேராசிரியரின் மனைவியாக, நடித்துள்ளார். அது அவருக்கு சிறந்த துணை […]
பிரதமர் மோடி காணொலி மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்குக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்வில் பணி ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார். நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட புதிய பணியாளர்கள், ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், […]
மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 1,115 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,421 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 16.98 சதவீதமாக உயர்ந்தது. நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக […]
பாஜக அல்லாத பிற மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்; இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதைக் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவோ அல்லது உறுப்பினர்கள் மூலமாகவோ உற்பத்தி செய்யும் பொருட்களை அரசுத்துறை மூலமாக நடத்தும் கண்காட்சிகளில் கலந்து கொண்டு விற்பனை செய்யலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஞ்சிபுரம் மாவட்டம் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியான […]
சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கிரெயின்ஸ் வலைதளம் மூலம் பதிவுகள் மேற்கொண்டு பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ; வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நிலவிவரங்களுடன்இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நிலஉடமை வாரியாக புவியியல் குறியீடுசெய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ் (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட் ரேஷன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Senior Digital Product Owner – Finance பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 முதல் 10 வருடம் […]
ஒடிசா முழுவதும் வரும் 16-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முழுவதும் 9 இடங்களில் வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளையும் அங்கன்வாடிகளுடன் இன்று முதல் 16ஆம் தேதி வரை மூட முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் […]
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக நேற்று அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக நேற்று அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் 52 புதிய வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர், இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களும் அடங்குவர். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது தொகுதியான ஷிகான் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். மாநிலத்தில் […]
கோடை காலத்தை முன்னிட்டு நெரிசலை சமாளிக்க 217 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும், 217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வே வழித்தடங்களில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைத்து சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 69 சிறப்பு ரயில்களும், தென் மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், […]