சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் இந்தர் இக்பால் சிங் அத்வால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள இந்தர் இக்பால் அத்வால், 2004 முதல் 2009 வரை 14வது மக்களவையின் துணை சபாநாயகராகவும், பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகராகவும் பணியாற்றிய சரஞ்சித் சிங் அத்வாலின் மகன் ஆவார். அத்வாலுடன், அவரது இளைய சகோதரர் ஜஸ்ஜீத் சிங் […]

வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று மாலைக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தருமபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 2023-2024 -ம்‌ நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல்‌ சிறப்பு முகாம் மூலம் இன்று மாலை வரை வட்டார போக்குவரத்து அலுவலகம்‌, தருமபுரி மற்றும்‌ இவ்வலுவலக கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌ அலுவலகங்கள்‌ அரூர்‌, பாலக்கோடு ஆகிய அலுவலகங்களில்‌ நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்‌ […]

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு […]

இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். […]

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Remount Veterinary Corps பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 20 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது […]

இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கையில், “ஏப்ரல் 3 ஆம் தேதி ஹரியானாவின் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. […]

கேரளாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் வேறு சில உடல் ரீதியான நோய்கள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை நோயிலிருந்து பாதுகாப்பது முக்கியம். மாநிலத்தில் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர், கொரோனா தொடர்பான இறப்புகள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், நீரிழிவு போன்ற […]

தமிழகத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

நிலக்கரி உற்பத்தி இந்தியாவில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மார்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12% அதிகரித்து 107.84 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 96.26 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள 37 நிலக்கரி உற்பத்தி சுரங்கங்களில் 29 சுரங்கங்கள் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற 11.04.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது. இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ வருகின்ற 11.04.2023 அன்று காலை 11.00 மணி முதல்‌ மதியம்‌ 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிடத்தில்‌ நடைபெறவுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌ […]