மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கார் விபத்தில் சிக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பனிஹால் பகுதியில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் கார் சனிக்கிழமை மாலை சிறிய விபத்தில் சிக்கியதாக ஏடிஜி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், இது ஒரு சிறிய விபத்து தான் என்று ஏடிஜி கூறியுள்ளார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று ரம்பனில் அமைச்சரின் கார் மீது லாரி […]

டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 535 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 25.98 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில், டெல்லியில் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வழக்குகளின் […]

பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதியன்று, கார்ப்பரேட் அல்லாத, பண்ணை சாரா சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் வருமானம் ஈட்டும் வகையில், ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் எளிதாக கடன் வழங்கும் நோக்கத்துடன் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. அனைவரையும் […]

ஏப்ரல் 10, 11 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” […]

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 10 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 50,000 […]

சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறு ஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராப் நீட்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிவிப்பில்; சேவையின் தரம் குறித்த ஒழுங்குமுறையின் மறுஆய்வுக்கான விண்ணப்ப தேதியை ட்ராய் நீட்டித்துள்ளது. இந்த ஒழுங்கு முறைக்கான வரைவு வழிகாட்டுதல்கள் 24.02.2023 அன்று வெளியிடப்பட்டது. இது குறித்த கருத்துக்களை தொடர்புடையவர்கள் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பல்வேறு தரப்பினர் மற்றும் […]

தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் […]

வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசி அவர்; 1 முதல் 9-ம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28 வரை நடைபெறுவதாக கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டு அதன் சுற்றறிக்கை கடந்த மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், […]

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை பொதுமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல்‌ 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1 மணி வரை […]

புதிய வகை XBB.1.16, குழந்தைகளை பாதிக்கும் சில அறிகுறிகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் மீண்டும் கொரோனா வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், புதிய வகை XBB.1.16, குழந்தைகளை பாதிக்கும் சில அறிகுறிகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது ஆர்க்டரஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரம்ப அலைகளில் காணப்படாத சில புதிய நோய்களையும் சேர்த்துள்ளது. அதிக காய்ச்சல், சளி மற்றும் இருமல் மற்றும் சீழ்ப்பிடிப்பு இல்லாத சில முக்கிய அறிகுறிகள் […]