தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் […]

போப் பிரான்சிஸ், சுவாச நோய்த்தொற்றால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இத்தாலி: கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து போப் பிரான்சிஸ், வியாழன் அன்று சுவாச நோய்த்தொற்றால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் முற்றிலும் குணமாகும் வரை சிகிச்சைக்காக ரோம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ளது‌. 86 வயதான போப், நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றினார், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று […]

பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித்பால் சிங்கின் புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பஞ்சாபில் தற்போது நடந்துவரும் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சீக்கியர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படி, அகல் தக்த்தின் ஜதேதரிடம் கோரியிருப்பதாகவும், இந்த விஷயத்தில் சீக்கியர்களின் நலனுக்காக ஜதேதர் சாஹிப் தீர்க்கமான முடிவை எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். […]

சத்தீஸ்கர் அரசாங்கம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்தத் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையை மாநில அரசு வழங்கும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. வேலையில்லா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் சத்தீஸ்கரை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 35 […]

தமிழகம் முழுவதும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் வாரத்திலிருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இத குறித்து அவர் தனது ட்விட்டரில் , “தமிழகத்தில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி விட்ட நிலையிலும், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் […]

நாளை முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட‌ ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ பயன்பெறும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மற்றும்‌ அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள்‌ மூலம்‌ ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம்‌ செய்ய தமிழக […]

கதர் தொழில்துறையைச் சேர்ந்த நபர்களுக்கு நாளை முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும். கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Advisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு […]

தேசிய சுகாதார ஆணையம், தனது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் மருத்துவமனைகளில் ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புற நோயாளிகள் பிரிவில் உடனடி பதிவு சேவைகள் நோயாளிகளுக்கு, வழங்கப்படுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே 10 லட்சம் நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர். கடந்த மாதம் (பிப்ரவரி 23, […]

டெல்லியில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு முதல் முறையாக நேற்று 300 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 13.89 சதவீதமாக உயர்ந்தது, நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் உயிரெழுத்துவதாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு […]