மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவித்தொகை திட்டம் அதில் ஒன்றாகும். மற்றொன்று பேகம் ஹசரத் மஹல் திட்டமாகும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமரின் கல்வி அதிகாரம் அளித்தல் […]

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என […]

14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் சார்பில் பட்டியலிடப்பட்ட 6 சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிப்புத்திட்டம் ( SEEKHO AUR KAMAO SCHEME) அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு அவர்களது தகுதிகளுக்கேற்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். சிறுபான்மையின மக்களை சுய […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நாளை நடைபெறவுள்ளது. சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ […]

நாளை பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2023 மார்ச் 25-ந் தேதி கர்நாடகா செல்ல உள்ளார். காலை 10.45 மணியளவில் சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணியளவில் ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கிவைப்பதுடன், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த […]

அரசியல் சாசனத்தின் 348(1)(ஏ)பிரிவு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 348-வது சட்டப்பிரிவின் 2-வது பிரிவின் உட்பிரிவு (ஏ) பிரிவு (1)-ல், உயர்நீதி மன்றங்களின் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநில […]

“நம்ம ஸ்கூல்‌ – நம்ம ஊரு பள்ளி” திட்டத்திற்காக சமூக பங்களிப்பு நிதி வழங்கிடலாம்‌. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால்‌ பள்ளிக்‌ கல்வித் துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசு பள்ளிகளின்‌ மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும்‌ தனிப்பட்ட பங்களிப்புகளை பெற, “நம்ம ஸ்கூல்‌ – நம்ம ஊரு பள்ளி” என்ற பெயரில்‌ தமிழக அரசால்‌ ஒரு நிறுவனம்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இதன்‌ வாயிலாக […]

ராகுல் காந்தி சிறை தண்டனை தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது‌. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் […]

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தால்‌ இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள்‌ களப்பணி வாயிலாகக்‌ கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள்‌ பாதுகாப்பு மையத்தில்‌ பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பாதுகாக்கப்பட்டு வரும்‌ ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம்‌ செய்யும்‌ வகையில்‌ தமிழ்ச்‌ சுவடியியல்‌ மற்றும்‌ பதிப்பியல்‌ பட்டயப்‌ படிப்பு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ 2013-ம்‌ ஆண்டு முதல்‌ […]

தமிழகம் மற்றும், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]