டிசம்பர்‌-2022 மற்றும்‌ ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு, அதில்‌ ஏற்கனவே உள்ளூர்‌ கேபிள்‌ டிவி ஆபரேட்டர்களால்‌ செலுத்திய தொகை போக, மீதத்‌ தொகை மட்டுமே செலுத்த வேண்டும்‌. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ SMS சர்வர்கள்‌ டிசம்பர்‌-2022, ஜனவரி-2023 மற்றும்‌ பிப்ரவரி-2023 முன்பாதி வரை தொழில்நுட்ப காரணங்களால்‌ இயக்கம்‌ தடைபட்டிருந்தது SMS சர்வர்கள்‌ […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில்‌ ஓர்‌ முன்னோடி முயற்சியாகும்‌. இது குறித்து விரிவான அறிவுரைகள்‌ அனைத்து […]

நடிகர் பிந்து நந்தா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையின் போது காலமானார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஆலிவுட் நடிகர் பிந்து நந்தா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையின் போது காலமானார். அவருக்கு வயது 47 நந்தா கடுமையான கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டார். கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக கடந்த […]

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் […]

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் வரும் 13-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை அடுத்த திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். வரும் 12-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், மறுநாள், 13-ம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் 13-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு […]

முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்” தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்” தொடங்கப்பட்டது. இதற்காக மாநில […]

தமிழகத்தில் 2023 பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் 19% உயர்ந்து ரூ.8,774 கோடியாக உள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ரூ 1,33,026 கோடி என்பதைவிட 12% அதிகமாகும் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் அதிகபட்சமாக செஸ்வரி வசூல் ரூ.11,931 கோடியாக உள்ளது. பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் ஒப்பீட்டு அளவில் வருவாய் வசூல் குறைவாக இருக்கும். தமிழகத்தில் 2022 […]

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 7 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் […]

குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் அரசுக் கொள்முதல் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தவும் “எம்எஸ்எம்இ கனெக்ட் 2023” நிகழ்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது சென்னை கிண்டியில் உள்ள திரு வி க தொழிற்பேட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வியாபாரா மேம்பாட்டு திட்ட நிகழ்வு மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட தொழில்கள் […]