ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]
Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Business Architect பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு […]
தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இருவார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் நடைபெற உள்ளது தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இரு வார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் இன்று சென்னையின் கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை 2 வது தளத்தில் உள்ள கல்லூரி கவுன்சில் ஹாலில் நடைபெறுகிறது. பயனாளிகள், தொழிலாளர்கள், துறைசார்ந்தவர்கள் இந்த […]
இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ; நகரில் இன்று முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர்; எருமைப்பாலின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள 3,000 சில்லறை விற்பனையாளர்கள், லிட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை அமலில் […]
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட […]
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார் 3 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், முதன்முறையாக e-kyc முறையில் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து […]
100 நாள் வேலை வருகைபதிவேடு இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர்உள்ள ஒவ்வொரு குடுூம்பத்திற்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்குவேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு […]
மேற்கு வங்கத்தில் 5 குழந்தைகள் சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் குறைந்தது 5 குழந்தைகள் சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அடினோவைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிகழ்வுகளின் அச்சத்தைத் தூண்டுகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இந்த இறப்புகள் தொற்றுநோயால் ஏற்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளனர். அடினோவைரஸ் […]
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 5.9.2022 அன்று சென்னையில் நடைடுபற்ற விழாவில், பெண்களின் உறுதி செய்து, அனைவரும் பெண்கல்வியை போற்றும் விதமாகவும், பெண்கள் கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் […]
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 4, 10, 308 மாணவர்களும், 4, 41, 173 மாணவிகளும், ஒரு திருநங்கை என 8, 51, 482 பேர் எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3, 67, 535 […]