திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த 110 கிலோ வோல்ட், பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி நெல்வாய் மற்றும் நெய்வேலி மின்பாதை பராமரிப்பு பணிகள் வரும் ஜூன் 24-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை பெரியபாளையம் பஜார், நெல்வாய், பாலேஸ்வரம், ராசந்திரபுரம், அஞ்சாமேடு, பனம்பாக்கம், ஆலபாக்கம் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், நெய்வேலி பெத்தநாயகபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு […]
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும். மசாலா பொருட்கள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி […]
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி […]
கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் 30.06.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 30.06.2025 அன்று நடைபெற உள்ளது. குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை […]
சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஸ்பர்ஷ் நடமாடும் வாகனம் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகின்ற 01.07.2025 அன்று வருகைதரவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட முப்படைய சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள். ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஸ்பர்ஷ் மொபைல் வேன் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு 01.07.2025 அன்று வருகை […]
பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) 23.06.2025 அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த மார்ச் 2025 , மேல்நிலை இரண்டாம் பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் […]
தொடக்க, நடுநிலைப் பள்ளி அனைத்து வகையான ஆசிரியர்கள் 2025-2026. பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் EMISல் பதிவேற்றம் செய்வது சம்பந்தமான தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-6 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதே போல […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் ஜூன் 23 முதல் 27 வரை அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநனர்; அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை உலக போதைப் பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் எதிரான மாநில அளவிலான […]
சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிக்க கட்டணமில்லா பயண டோக்கன், இன்று முதல் ஜூலை 31 வரை அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 7.30மணி வரை வழங்கப்பட உள்ளன. சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு இன்று முதல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையை […]
தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், பொறியியல், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், சுற்றுச்சூழலியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு ‘தமிழக அறிவியலறிஞர் விருது’ வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம், சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநிலமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; […]

