பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து 2021 – 2022ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அந்தந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக மத்திய அரசால் […]
பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிப்பொருளாகும். […]
KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst Acquisition Manager – CASA-RL SALES-Sales பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் […]
கடந்த சில ஆண்டுகளாக பாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.2022 டிசம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டாக் மூலம் வசூலான தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் […]
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட […]
ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சக தலைவர் அண்ணாமலை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் காலம் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகான இடைத்தேர்தல்களில் 80% ஆளும்கட்சி தான் வென்றுள்ளது. ஆனால் பொதுத்தேர்தலில் தோற்றிருப்பார்கள். இந்த ஒரு இடைத்தேர்தலால் எதுவும் மாறப்போவது இல்லை. […]
நேற்று இரவு 8 மணி அளவில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. NDRF-SDRF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதிபடுத்தி உள்ளனர். காவல்துறை ஜவான்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதுவரை 3 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று உத்தரபிரதேச துணை முதல்வர் […]
தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் மற்றும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்த வனத்துறை முடிவு செய்துள்ளது தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் வருடத்திற்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நீர் பறவைகளின் ‘கணக்கெடுப்பானது ஜனவரி […]
நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த […]