இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். சென்னை Officers Training Academy (OTA) காலியாக உள்ள 61th Short Service Commission (Tech) Men (Oct 2023) and 32st Short Service Commision (Tech) Women Course (Oct 2023) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 191 […]
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்டணம் விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் தவிர டிஜிட்டல் ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படவில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் […]
பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. MTS எனப்படும் பன்னோக்கு தொழில்நுட்பம் சாராத பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு-2022 (நிலை-1)-ஐ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கணினி வழியில் நடத்தவுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ssc.nic.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி […]
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமூக ஆர்வலர் பிரபாபென் சோபாக்சந்த் ஷா காலமானார் . பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபாபென் சோபாக்சந்த் ஷா தனது 92வது வயதில் காலமானார். பிரபாபென் சோபாக்சந்த் ஷா தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் “தாமன் கி திவ்யா” என்றும் அழைக்கப்படுகிறார். ஏழை எளிய மக்கள் உணவு உட்கொள்ள கேன்டீன்களை […]
கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]
ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவை திருத்தம் செய்வதற்காக இன்று முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, […]
கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் முழு அறிவிப்புக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் […]
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. […]