மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 10 […]
இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது. இதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை […]
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு […]
மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் […]
சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகன், திருமணத்தை காரணம் காட்டி பல ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஜாஞ்ச்கிர் சம்பா எம்எல்ஏவுமான நாராயண் சண்டேலின் மகனான பலாஸ் சண்டேல் மீது புதன்கிழமை கற்பழிப்பு வழக்கு பதிவு […]
பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவர்கள் இடைத்தேர்வு எழுதுவதை பள்ளிகளால் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கல்வி என்பது “வாழ்வதற்கான உரிமையின் கீழ் உள்ளடங்கிய ஒரு முக்கியமான உரிமையாகும், கட்டணம் செலுத்தாத காரணத்தால் பள்ளிக்குச் செல்வதையோ அல்லது தேர்வு எழுதுவதையோ தடுப்பதன் மூலம் ஒரு குழந்தையை துன்புறுத்த முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் உதவிபெறாத பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர், கட்டணம் செலுத்தாத காரணத்தால் […]
அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான […]
இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும். குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு […]
இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இந்த […]