இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Zonal & Assistant Sthapathis பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 40 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 41 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Technical in […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்: ஓய்வூதிய கோரிக்கைகளை UMANG ஆப் மூலம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் […]

இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, ஜனவரி 19 ஆம் தேதி புறப்பட வேண்டிய மேலும் 68 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5% பணியாளர்களை – 2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் குறைக்கும் என்று அறிவித்தது. இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பொருளாதார மாற்றங்கள் நிலைக்கு […]

உலகின் மிக வயதான நபரான பிரஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே காலமானார். உலகின் மிக வயதான நபரான பிரஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, தனது 118 வயதில் பிரான்சின் தெற்கு நகரமான டூலோனில் காலமானார். பிப்ரவரி 11, 1904 இல் லூசில் பிறந்த அவர், 1944 இல் ஒரு கத்தோலிக்க அறக்கட்டளையில் சேர்ந்தபோது ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்றார். அவர் தனது 117வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். […]

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி […]

தேசிய வருவாய்‌ வழி உதவித்தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பப்‌ படிவங்களை பதிவிறக்கம் நாளை தான் கடைசி நாள். 2022- 2023-ம்‌ ஆண்டிற்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌திட்டத்‌ தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலமாக விண்ணப்பப்‌ படிவங்களை நாளை மாலை வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த […]

கர்நாடகாவில் மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆகக் குறைப்பதற்கான வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்மொழியப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், 21 வயது வரம்பாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கர்நாடக கலால் துறை மேற்கோளிட்டுள்ளது. கர்நாடக கலால் சட்டம், 1965 இன் பிரிவு 36(1)(ஜி) 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் விற்பனை […]

சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியின் போது, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு […]

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் […]