சாலை பாதுகாப்பு வாரம் 2023 ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படும் நிலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பொறியியல் நடைமுறைகளை அதிகரிக்க சாலை பாதுகாப்பு தணிக்கை குறித்து பொறியாளர்களுக்கு இந்த ஆணையம் பயிற்சி அளிக்கிறது. இதற்கு 15 நாட்கள் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிக்கும் பொறியாளர்களுக்கு மேலாளர் மற்றும் துணை பொது […]
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 213 ஆக இருந்தது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் நிலை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்தில் கொண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய காற்றின் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி மற்றும் […]
MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் பிரச்சனை நிறைந்த காலகட்டத்தில் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்தப் […]
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது தொடர்பாக தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e.NRS) ஈடான, பிரத்யேக நிதியத்திற்குரிய உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் என்றழைக்கப்படும் புதிய வகை கடன் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில், செயல்பாட்டுக் கட்டணங்களோ, கூடுதல் பிணையங்களோ […]
பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், கொரோனா காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 15 சதவீதத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த கல்வி அமர்வில் 15 சதவீத கட்டணத்தை கணக்கிட்டு மாற்றி அமைக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய அல்லது பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு, அந்தத் தொகையை கணக்கிட்டு அவர்களுக்கே திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க […]
ராஜஸ்தானில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக, உதய்பூர் மாவட்ட ஆட்சியர், அனைத்துப் பள்ளிகளையும் இன்று மற்றும் நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு படி, ஜனவரி 18-ஆம் தேதி வரை 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படும். இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைவருக்கும் பொருந்தும். வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை குறைவதால் குளிர் அலையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் […]
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே வரும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை […]
உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து தாலுகாக்கள், காவல் நிலையங்கள், வளர்ச்சித் தொகுதிகள், பள்ளிகள், நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் செய்ய வேண்டும். உத்தரவை மீறினால் தண்டனை விதிக்கப்படும். குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல நுழைவுத் […]
கொரோனா அதிகரிப்பை அனைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கேரள அரசு அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பித்தது. மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாநில அரசின் உத்தரவின்படி, அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநில அரசு […]
ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்று நடந்தது. இதில் அரவிந்த் ராஜ் என்னும் மாடுபிடி வீரர், யாரும் எதிர்பாராத விதமாக வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளையின் தாக்குதலால் படுகாயமடைந்தார். பின் அவரை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு […]