வைகை நதியை பாதுகாக்க, கங்கையை தூய்மைப்படுத்தும் தேசிய திட்டத்திற்கு இணையான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.புஷ்பவனம் தாக்கல் செய்த மனுவில் அனைத்து உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட சட்டப்பூர்வ நபரின் அந்தஸ்து கொண்ட வாழும் நிறுவனங்களாக அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட […]
போலி செய்திகளை வெளியிட்டு வந்த 6 YouTube சேனல்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூ-ட்யூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப்பிரிவு முறியடித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் […]
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் தனது 75வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜேபி இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான சரத் யாதவ் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். அவர் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]
பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கு போட்டித் தேர்விற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது. […]
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் விருப்பப்படி உயர் கல்வி படிப்பில் 3 விருப்பப் பாடங்களை வரும் 23-ம் தேதிக்குள் ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பள்ளிக்கல்வித் துறையில் இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர் கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு […]
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Wireman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,000 வரை […]
போகி பண்டிகையின் போது புகையை உருவாக்கும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பொங்கலுக்கு முந்தைய போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் கழிவுப்பொருட்களை எரிப்பது வழக்கம். விமான நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது உருவாகும் புகையினால் கடந்த 2018 ஆம் ஆண்டில் விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பல்வேறு விமானங்கள் திசை திருப்பம்/ ரத்து/ தாமதமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து […]
உத்தரபிரதேச அரசு லக்னோவில் 144 தடையை அமல்படுத்தி உள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், தேசிய நிகழ்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை மனதில் கொண்டு. லக்னோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல அரசு நுழைவுத் தேர்வுகள் போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு லக்னோவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்கு பருவமழை இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் […]
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையிலிருந்து கூடுதலாக 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தனது அறிவிப்பில்; அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பொங்கலையொட்டி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை இன்று முதல் 14-ம் ஆகிய மூன்று நாட்களுக்கு […]