ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தலிபான் தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தின் முன் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “காபூலில் வெளியுறவு அமைச்சகத்தின் முன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படுகிறது. காபூல் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தனது […]
ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் ஒரு கற்பனையான […]
ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யப்படும் என அரசால் அனுமதி […]
பொங்கல் பண்டிகையையொட்டி 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சிறப்புக்காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு […]
ஆதார் ஆணையம் ஆஃப்லைன் சரிபார்ப்பைக் கோரும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்திய ஆதார் ஆணையம் பயனர்களின் சிறந்த பாதுகாப்பிற்காக ஆஃப்லைன் சரிபார்ப்பைக் கோரும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில், ஆதார் பயனர்கள் அதன் தேவையற்ற பயன்பாட்டைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம், ஆதார் சரிபார்ப்பு செய்யும் நிறுவனங்களும் அதை இயற்பியல் நகலுக்கு பதிலாக QR குறியீட்டைக் கொண்டு சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாரை தானாக முன்வந்து பயன்படுத்தும் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பல மாநில அரசு ஆலோசித்து வருகிறது. . நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இன்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் இந்த மாதம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான […]
சேலம் பெரியார் பல்கலைக் கழக முறைகேடு விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்பேற்றுக் […]
லட்சக்கணக்கான மக்களை மெய்சிலிர்க்க வைத்த ஆதியோகியின் மார்பளவு சிலை பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுராவில் உள்ள சத்குரு சந்நிதியில் ஜனவரி 15, 2023 அன்று திறக்கப்பட உள்ளது. ஆதியோகியின் 112 அடி மார்பளவு சிலை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மார்பளவு சிலை, சத்குரு சந்நிதியில் உள்ள ஆதியோகியை மாலை 6 மணிக்கு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக […]
இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பல பயனர்கள் அதிவேக இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பெருநகரங்களில் கூட இணைப்பைக் பயன்படுத்த பலர் ஆர்வத்துடன் உள்ளனர். மொபைல் டேட்டா சிக்கல்களால் சிரமம் ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். Air Plane Mode முறையை பயன்படுத்த வேண்டும்: மொபைல் டேட்டா கனெக்டிவிட்டி சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், முதலில் Airplane Mode-ஐ சில நிமிடங்களுக்கு ஆன் செய்து, பிறகு […]
இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். தொன்மை சிறப்புமிக்கத் தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிடத் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பெயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் […]