ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியீட்டு விழா செய்தி குறிப்பில்; மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ம் தேதியன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்தூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் […]
சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் […]
கேரளா மாநிலம் கீழ்வாய்ப்பூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சில பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்வின் போது இதேபோன்ற சம்பவம் பதிவாகிய ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. கீழ்வாய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை […]
ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம்/தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பணிபுரிய இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அங்கு Accountant, Data Entry Operator, Driver பணிகளுக்கு என மொத்தம் 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி 12 வது தேர்ச்சி, ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது […]
குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023-ன் ஒரு பகுதியாகயாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும், பராக்ரம் திவாஸ்-‘பராக்கிரம தினம்’ கொண்டாடப்படுகிறது. டெல்லியில் 2023, ஜனவரி 23, 24 தேதிகளில் இந்திய ராணுவத்தினரின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக அங்குள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பழங்குடியினர் நடன விழாவான ‘ஆதி […]
பள்ளிக்கல்வித்துறையில் 14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை […]
கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை முதல் 12-ம் […]
120-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோக்களை தயாரித்த அமர்புரி என்கிற ஜலேபி பாபா குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் தோஹானாவில் உள்ள பாபா பாலக்நாத் கோவிலின் பூசாரி ஜலேபி பாபா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய சோதனையில் அவர் எடுத்த பல ஆபாச வீடியோக்கள் சிக்கியது. காவல்துறை […]
மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரிபாதி உடல் நலக்குறைவாழ் காலமானார். பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார். மூன்று முறை உ.பி., சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த அவர், டிசம்பரில், கை எலும்பு முறிவு மற்றும் மூச்சுத் திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டார். […]
அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வாழைப்பழம் கொடுக்கும் இன்று முதல் தொடங்க உள்ளது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் இன்று முதல் கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சியால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. காலை உணவில் ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் கறி ஆகியவை அடங்கும். மாணவர்களுக்கு முட்டை மற்றும் […]