இது தொடர்பாக தருமபுரி அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஐடிஐ படிப்பவர்களுக்கு 10 மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழ்‌ தரப்படும்‌ என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. அதன்படி 8-ம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐ-களில்‌ சேர்ந்து படிப்பினை முடிப்பவர்களுக்கு 10ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌, 10ஆம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐககளில்‌ சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 12ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ பள்ளிக்கல்வித்துறை […]

விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹரியானாவில் விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் தான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் . எனது இமேஜை கெடுக்க முயற்சி […]

கேரளாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் அருகே உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானத்தின் போது கெட்டுப்போன உணவை அருந்திய 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். […]

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 6-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]

முன்னாள் முதலமைச்சர் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூன்று பேர் உயிரிழப்பு. ஞாயிற்றுக்கிழமை குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தின் போது மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் […]

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வரவேற்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், வழக்கமாக வழங்கக்கூடிய அகவிலைப்படியை, மத்திய அரசின் அறிவிப்புப்படி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்காமல், […]

10-ம் வகுப்பு ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு மாணவர்கள், நாளை மாலை வரையில் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு மாணவர்கள், கடந்த 28-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்து வந்தனர். மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். […]

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன்‌ பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல்‌ செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல்‌ 38 சதவீதமாக உயர்த்தப்படும்‌. இதனால்‌ சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு […]

IDFC First Bank காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Senior Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும். […]

அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் நவம்பர், 2008-ல், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது. 3,000 மருந்தகங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கு 2017 டிசம்பரில் எட்டப்பட்டன. மேலும், மார்ச், 2020ல் மொத்தம் 6,000 விற்பனை நிலையங்கள் என்ற மாற்றி அமைக்கப்பட்ட இலக்கும் எட்டப்பட்டது. கடந்த நிதியாண்டில் விற்பனை நிலையங்களின் […]