நாளை முதல் வரும் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் […]
பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் […]
ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவசதியாக , சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 […]
பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார். கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார். சமீபத்தில், அவரது புற்றுநோய்க்கான மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக மருத்துவமனையில் […]
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார். இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு […]
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் […]
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும். காலை 10.30 மணிக்குத் தேர்வு தொடங்கி நண்பகல் 1.30 மணிக்கு நிறைவடையும். தேர்வு முடிவுகள் […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Digital Product Owner Cx பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று […]
2021ல் இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி, 2021ம் ஆண்டில் 4,12,432 எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெற்றதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர். 3,84,448 பேர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய ஆண்டான 2020-ம் ஆண்டில் விபத்துக்களும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், […]
குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 01, 2023 வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளை இடைநிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, 2023 ஜனவரி 1 வரை அனைத்து வாரியங்களின் […]