தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவிக்கு ஊர்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ் குமாரை தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை […]
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;:2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு […]
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் […]
சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, சில பழைய நடைமுறைகளைக் கைவிடலாம் என்பதே இதன் நோக்கம். நமது அன்பு பரிமாற்றத்தில் புத்தகங்கள் இடம்பெற்றதன் மூலம், நாம் அடுத்த கட்ட அறிவு இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். அதேபோல இப்போது […]
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தடுப்பு […]
பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார். இன்று அவர் காலமானார். அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை […]
தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது. டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் அதிகமான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கும் இது உதவியுள்ளது என்று அமைச்சர் கூறினார். மத்திய […]
நாளை முதல் வரும் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் […]
பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் […]
ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவசதியாக , சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 […]