மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது. டெல்லியில் ஃபுல்கிரீம், டோன்ட் மற்றும் டபுள் டோன் பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும் என்று மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இது ஐந்தாவது முறையாக நிறுவனம் விலையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உள்ளீடு […]
வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலும் வலுவிழக்கக்கூடும். இதன் […]
சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உட்பட ட்விட்டரில் கிட்டத்தட்ட 40 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர் ஒருவர் திருடியதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் வெளியிட்ட […]
தமிழ்நாட்டில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்ககள் உள்ளிட்டோர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே அதிக நிர்வாகிகள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிறுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அனைத்தும் […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, சி மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 196 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 02 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Senior Data Science பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் BE கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]
நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, கல்வி அமைச்சகம், நீர்வள அமைச்சகம், நிதி ஆயோக், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும், […]
பறவைக்காய்ச்சல் அதிகரித்து வந்த நிலைக்கு கேரளாவில் 6000-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் பறவைக் காய்ச்சலின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று வெவ்வேறு ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோயைத் தடுக்க, கோழி மற்றும் வாத்துகளை கொல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் கீழ், மாவட்டத்தில் 6,000க்கும் மேற்பட்ட பறவைகள் […]