தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ தேர்வு நாளை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ சிறை அலுவலர்‌ பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ ஆகிய இருவேளைகளில்‌ பென்னாகரம்‌ வட்டத்தில்‌ உள்ள ஜெயம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ இணையவழி முறையில்‌ நடைபெறவுள்ளது. இதில்‌ மொத்தம்‌ 410 தேர்வர்கள்‌ தேர்வு எழுதவிருக்கின்றனர்‌. தேர்வு மையத்தில்‌ தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும்‌ முழு அளவில்‌ செய்யப்பட்டுள்ளன. […]

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 470 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு […]

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் “செயல்படாது” என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் எம் எஸ் மூலம் […]

சீனா மற்றும் பிற நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. நாட்டில் வைரஸ் பரவுவது இன்னும் அதிகரிக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது , நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரம் தொடர்பான தேவையான வழிகாட்டுதல்களுடன் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். […]

பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் காலை 10 மணி முதல் […]

பிரபல சின்னத்திரை நடிகை துனிஷா ஷூட்டிங் செய்து கொண்டு இருந்த இடத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 20 வயதான பிரபல சின்னத்திரை நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலி பாபா என்ற சீரியல் மூலம் பிரபலமான துனிகா ஷர்மாவுக்கு ரசிகர்கள் அதிகம். நேற்று படப்பிடிப்புக்கு சென்ற துனிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் […]

பேங்க் ஆப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty Member, Office Assistant, Watchman cum Gardener, Counsellor பணிகளுக்கு என எட்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000 மாத […]

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்திய 4ஜி சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 31-03-2022 அன்று 6,000 தளங்களுக்கான பர்சேஸ் ஆர்டரை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, பிஎஸ்என்எல் தனது 1 லட்சம் 4ஜி தளங்களுக்கான டெண்டரை அக்டோபர் 2022 இல் வெளியிட்டது. 23.10.2019 அன்று, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கான மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. தன்னார்வ ஓய்வுத் திட்டம் (விஆர்எஸ்), இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்களை உயர்த்துவதன் […]

தென்னிந்திய திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்த கிணறு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001ம் ஆண்டு விவகாரத்து செய்துவிட்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது சின்னத்திரை நடிகர் சதீஷை தனது 43வது வயதில் […]

உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை‌ மேற்கொண்டார். உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கண்காணிப்பை […]