தமிழகத்தில் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று முதல் மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]
தருமபுரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் புறக்கடை / கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ. […]
ஜனவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதால் 2023 புத்தாண்டுக்கான உங்கள் காலெண்டரைத் திட்டமிடுவதற்கான நேரம் இது. புத்தாண்டு 2023 நெருங்கிவிட்டதால், புதிய வங்கி விடுமுறைப் பட்டியலின்படி உங்கள் விடுமுறைகளைத் திட்டமிடுங்கள். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, ஜனவரி 2023 இல் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். 14 நாள் விடுமுறையைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு […]
உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குமானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்னும் சில நாள்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இந்த […]
நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை செயலர்கள் மாநாட்டில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொது விநியோக நடைமுறைகள் பற்றி அதன் செயலாளர் விளக்கினார். உணவு தானியங்கள், மளிகை பொருட்கள், திணை வகைகள் […]
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது. எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து […]
ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் வாங்க முடியும். டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்த […]
பிரபல சமூக ஆர்வலரான சுலோச்சனா ராமசேஷன் காலமானார். சென்னையில் உள்ள எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் தொடர்புடைய பிரபல சமூக ஆர்வலரான சுலோச்சனா ராமசேஷன், கனடாவின் டொராண்டோவில் உள்ள தனது மகள் வீட்டில் காலமானார். அவருக்கு வயது 89. பரவலாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, பசுமை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஏழைகளுக்கான நலன்புரி நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வுக்காக எக்ஸ்னோரா மூலம் ஆதரவைத் திரட்டி, சென்னையில் உள்ள குடிமை இயக்கத்திற்கு முக்கியப் […]
ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact […]