20-ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகத்தை உருவாக்கும்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்‌ வழங்கப்படும்‌ மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-2023 நிதியாண்டுற்காக சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ பருவநிலை மாற்றம்‌, இளைஞர்‌ நலன்‌மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டப்‌ […]

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரத்தில்‌ புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ நேரடி மாணவர்‌ மற்றும்‌ மாணவிகள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகளிடமிருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக வரவேறக்கப்படுகிறது. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ திண்டுக்கல்‌ அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ உதவி மையம்‌ அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. விண்ணப்பக்‌ கட்டண தொகையான ரூ.50 விண்ணப்பதாரர்‌ Debit […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprenticeship Training-க்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். […]

யூடியூப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் ஏற்றும் எண்ணம் தற்பொழுது மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொழுது பதில் அளித்த அவர், 2000மாவது ஆண்டின் தகவல் […]

ஆதார் அட்டை இப்போது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் முதல் வருமான வரி, வரை அனைத்தும் தற்ப்போது ஆதார் உடன் இணைக்க அரசு கட்டாயமாகியுள்ளது. அரசாங்கமும் பிற நிறுவனங்களும் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு தேவைப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில் மக்கள் அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் எனவும் ஆதார் ஒதுக்கப்படும் […]

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று இரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 10.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா அருகே ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ 31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 […]

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 1-ம் முதல் […]

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ “ மஞ்சப்பை விருது” பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் “மீண்டும்‌ மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, 2022-23- ஆம்‌ நிதியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும்‌ நெகிழியின்‌ தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்கு மட்டை, காகிதங்களால்‌ ஆன பைகள்‌ / உரைகள்‌ ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின்‌ பயன்பாட்டை ஊக்குவித்து […]