ஆந்திர மாநிலத்தில் சமூக ஓய்வூதியத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த மாநில அமைச்சரவை அனுமதி அளித்தது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அறிக்கையின்படி, இந்த ஓய்வூதியம் அதிகரித்ததன் காரணமாக மாநில அரசுக்கு ரூ.130.44 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மாநிலத்தில் தற்போது 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர், மேலும் நடப்பு மாதத்தில் 2.43 லட்சம் […]

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்க இயக்குனரகம் நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர் 19-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகைக்கு சமன் அனுப்பப்பட்டுள்ள. செப்டம்பர் 2, 2021 அன்று ராகுல் ப்ரீத்திடம் போதைப் பொருள் கிடைத்த வழக்கு தொடர்பாக அமலாக துறை விசாரணை மேற்கொண்டது. எல்.எஸ்.டி மற்றும் எம்.டி.எம்.ஏ மற்றும் பிற போதைப்பொருட்களை வழங்கும் […]

மாண்டஸ் புயல் மழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாண்டஸ் புயல் மழையின் காரணமாக 9-ம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து […]

வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு சேவைகளை டிஜிட்டல் தளத்தின் மூலம் www.ncs.gov.in வழங்க தேசிய வேலைவாய்ப்பு சேவைத் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த இணையத்தளம் வேலை தேடும் நபர்கள், வேலை வழங்கும் நபர்களை ஒருங்கிணைக்கிறது.  மாநில வேலைவாய்ப்பு இணையதளங்களுடன் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தை இணைக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்து 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வேலை தேடுவோர் பதிவுக்கு தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையப்பக்கத்தை […]

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான “சூர்ய கிரண்” 16-வது முறையாக நேபாள ராணுவப் போர்ப் பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில், 2022 இன்று முதல் டிசம்பர் 29 வரை நடைபெறவுள்ளது. “சூர்ய கிரண்” பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்றன. நேபாளத்தின் ஸ்ரீ பவானி பக்ஷ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இந்தியாவின் 5-வது கோர்க்கா ரைபிள் படைப்பிரிவினரும் […]

பொதுவாக பாஜகவினர் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழி பெயர் வைத்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா; பா.ஜ.க அரசு தான் `பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. திறமையின்மையைக் குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் புள்ளிவிவரங்கள் உண்மையான பப்பு யார் என்பதைக் காட்டுகிறது. நாட்டில் தொழில்துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில், கடந்த 26 மாதங்களில் இல்லாத […]

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்து ஏற்றுமதி செய்த நான்கு இருமல் மருந்து தரமானதாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனைகளில் கலப்படம் எதுவும் இல்லை என ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர் பக்வந்த் குபா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தால் நான்கு இருமல் சிரப்களின் கட்டுப்பாட்டு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார். ப்ரோமெதாசின் […]

பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தப் புதிய […]

1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4,000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியிடங்கள் தவிர, மீதம் […]