உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் […]

அஞ்சல் குறை தீர்க்கும் நாள் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அஞ்சல்துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 23-ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் dochennainorth.tn@indiapost.gov.in மூலமாகவோ 20.12.2022 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப […]

பழைய ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நீங்கள் வேலை செய்யாமல் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பு. நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டு குறிப்பும் அதன் வித்தியாசமான மற்றும் தனித்துவமான மதிப்பைக் கொண்டுள்ளது. உங்களிடம் ஒரு தனித்துவம் வாய்ந்த 1 ரூபாய் இருந்தால் புழக்கத்தில் இல்லாத […]

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ 16-ம் தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது. […]

குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார். குஜராத் மாநில தலைநகரில் இன்று நடைபெறும் முதல்வர் பூபேந்திர படேலின் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து குறைந்தது 20 முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்திநகரின் புதிய செயலக கட்டிடத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் […]

தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

பான் கார்டை ஆதாருடன் 2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் செயலிழக்க நேரிடும். SMS […]

சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில்லறை சிகரெட் விற்பனையானது புகையிலை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை பாதிக்கிறது என்று குழு கருதுகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் புகைபிடிக்கும் பகுதிகளை அகற்றவும் குழு பரிந்துரைத்துள்ளது. WHO வழிகாட்டுதல்களின்படி, இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு 75% […]

கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020-21 அரவைப்பருவத்தில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, […]

விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது. பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு. நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு. இதற்கிடையே, […]