தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் […]

வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளார் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது அறிக்கையில்; என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், […]

டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசு அளவு மோசமடைந்து வருவதால், டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நடவடிக்கையால் டெல்லியின் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது. “தேசிய தலைநகரில் காற்றின் தரக்குறியீட்டு 400 என்ற கடுமையான பிரிவில் உள்ளது, தேசிய தலைநகரின் காற்றின் தரம் மேம்படும்” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரி விஜய் […]

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்தாலும், […]

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயர்‌ நீதிமன்றத்தின்‌ சிறுவர்‌ நீதிக்‌ குழு மற்றும்‌ போக்சோ குழுவினர்‌ போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல்‌ வன்முறை தடுப்புச்‌ சட்டம்‌) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும்‌ அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள்‌ வழங்கியுள்ளனர்‌. அதன்படி […]

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Security Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சென்னையில் வேலை. மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் […]

2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டத்தை, 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண். 20-ஐ (நவம்பர் 7, 2022 தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி திருத்தப்பட்டது) பயன்படுத்தி மத்திய அரசு அறிவித்துள்ளது . இத்திட்டத்தின் விதிமுறைகள்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் […]

பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி […]