பிரதமர் கிசான் திட்ட விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 12-வது தவணை நிதியை பிரதமர் […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ 11.7 லட்சம் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் அல்லது சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் […]
சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 4-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 49 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 260 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க […]
முக்கியமான எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2021 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் (தோராயமாக) 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உரங்கள், எஃகு, நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரை விட, இந்த ஆண்டு அக்டோபரில் அதிகரித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு தொழில்துறைகளின் உற்பத்தியில் தனிப்பட்ட மற்றும் இணைந்த […]
டிசம்பரில் வங்கிச் செயல்பாடுகளைக் கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் விவரங்களை பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 2022 டிசம்பரில் பல்வேறு மாநிலங்கள் மொத்தம் ஒன்பது நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஒன்பது விடுமுறை நாட்களைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாடு […]
மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம். KYC-யை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்: பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC-யை டிசம்பர் 12-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே வங்கி தரப்பில் இருந்து பலமுறை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது […]
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,303 கவுர விரிவுரையாளர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,895 பணியிடங்கள் காலியாக […]