தொழிற்‌ படிப்பு பயிலும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம்‌ ஆண்டு தொழிற்‌ படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க 30:11.2022 வரை கால […]

டிசம்பர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 […]

மின் நுகர்வோர்களின் ஆதார் எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. தற்பொழுது அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், […]

அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் நியமனம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் வழங்குதல் என அனைத்துத் துறைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ்களை கட்டாய ஆவணமாக்க மத்திய அரசு முன்மொழிகிறது. முன்மொழியப்பட்டும் சட்டத்தின் படி, மருத்துவமனைகளில் அனைத்து இறப்புச் […]

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்; திமுகவில் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், துணைப் […]

கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபம் நபர்களுக்கு கொரோனா அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சுவை இல்லாமை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் தொடர்ந்து கொரோனா […]

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் […]

நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது ‌‌. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் போட்டி இங்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்க்கு 306 ரன்களை எடுத்தது இந்தியா. அதிக […]

மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் மின்சார இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட […]

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]