Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Architect பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]
இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், நாட்டில் இயற்கை எரிவாயு சந்தையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அதன் மூன்று விதிமுறைகளான இயற்கை எரிவாயு குழாய் கட்டணம், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை திறன் விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தங்கள், 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும், ஒருங்கிணைந்த கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். ஒருங்கிணைந்த கட்டணத்தை அமல்படுத்துவது […]
பெங்களூருவில் சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 67 வயது முதியவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அவர் தனது வீட்டு உதவியாளருடன் உடலுறவு கொள்ளும்போது இறந்தது தெரியவந்துள்ளது என்று போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட காதலரான வீட்டு வேலைக்காரர், அவரது கணவர் மற்றும் சகோதரர் உதவியுடன் ஆணின் உடலை பிளாஸ்டிக் கவரால் மூடி அப்புறப்படுத்தியது தெரியவந்தது. பிடிபடுவோம் என்ற பயத்தில் தான் இவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். […]
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்து வைக்க அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் கலாச்சாரப் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைந்துள்ளது. ஜல்லிகட்டிற்கு தடை வந்த போது அவசர சட்டம் கொண்டு வந்து தடையை நீக்கியது அதிமுக அரசு. திமுக அங்கம் வகித்த மத்திய அரசு 2011-ம் ஆண்டு […]
மகாராஷ்டிர அரசு 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு வாக்காளர் பதிவை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜ்பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண்மைச் சாரா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், தேசியக் கல்வி கொள்கையின் கீழ் நான்காண்டு பட்டப் படிப்புகளை ஜூன் 2023 முதல் அரசு அறிமுகப்படுத்தும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் அதன் […]
கட்சித் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் பொது கூட்டங்களை நடத்தி, ஆளும் அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்தில் பாஜகவினரின் சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி […]
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நகராட்சி நிர்வாகத்துறை […]
இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனம் தனது Food டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசான் இந்தியாவில் உள்ள தனது உணவக கூட்டாளர்களிடம், மே 2020 இல் தொடங்கிய அதன் உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, டிசம்பர் 29, 2022 முதல் Amazon Foodஐ நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்தத் தேதிக்குப் பிறகு […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]