மதர் டெய்ரி நிறுவனம் பாலின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி உள்ளது. முன்னணி பால் சப்ளையரான மதர் டெய்ரி, ஃபுல் க்ரீம் பாலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முழு கிரீம் பால் விலையில் மாற்றம் […]
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது […]
புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன. நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் பிரேக் செயலிழந்ததாலோ அல்லது அதன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாலோ இது நிகழ்ந்து இருக்க […]
பணம் செலுத்த ஆதார் அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா..? ஆம் எனில், டிசம்பர் 1, 2022 முதல் இந்தச் சேவையைப் பெறுவதற்குக் கட்டணமாக நீங்கள் அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை அல்லது AePS அமைப்பு, உங்கள் ஆதார் எண் மூலம் முழு வங்கிச் சேவையையும் மேற்கொள்ளலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து மட்டுமே இந்தச் சேவையைப் பெற முடியும். ஒரு நபர் தனது வைப்பு தொகை, […]
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் 2023-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இன்று வரை […]
ஆரூர்தாஸ் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சென்னை தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். ஆரூர்தாஸ் உடல் இன்று மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் […]
தமிழக இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 19-ம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் […]
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Wireman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]
எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் […]
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் […]