திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் […]
பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிஎச்டி படிப்பிற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. எம்ஃபில்களை ரத்து செய்தல், முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடப் பணியை தளர்த்துதல் மற்றும் நான்கு வருட பட்டப்படிப்புப் படிப்பை முடித்த பிறகு பிஎச்டிக்கு பதிவு செய்ய விண்ணப்பதாரர்களை அனுமதித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி 4 […]
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான […]
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தற்போது வென்டிலேட்டர் […]
இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா […]
ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய்இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. எனவே, ஒட்டுநர், நடத்துநர்களுக்கு கீழ் குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அறிவுரைகள் ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட […]
வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]
ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியல் தொகுப்பைத் தனிப்பயனாக்க ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி- க்கு நெகிழ்வுத் தன்மையை வழங்கியுள்ளது. ரயில்களில் உணவு வழங்கல் சேவைகளை மேம்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகைக் கால உணவுகள், பயணிகளின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் உணவுப் பட்டியல் தொகுப்பை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான […]
அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]