பத்திரிக்கையாளர் ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அமிர்தா தொலைக்காட்சியின் முன்னாள் மண்டல தலைவர் ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 48. கேரளா மாநிலம் எண்ணிக்கரையில் வசிக்கும் கோபிகிருஷ்ணன் ஏசிவி செய்தி மற்றும் கௌமுதி டிவியில் பணியாற்றினார். உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபிகிருஷ்ணன் கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் […]
டெல்லியில் காற்று மாசுபாடு சிறிது குறைந்ததை அடுத்து, BS3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS4 டீசல் கார்கள் இயக்குவதற்கான தடையை டெல்லி அரசு நீக்கியது. இன்று முதல் அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படும். கட்டுப்பாடுகள் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றத்தைக் கவனித்து வருவதால், மெதுவாகவும் படிப்படியாகவும் அரசாங்கம் கடந்த வாரம் செயல்படுத்தப்பட்ட GRAP திட்டத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த சில […]
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக காவல்துறையினர் அறிவுரைகளை சென்னை காவல் துறை வழங்கி உள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகப்படியான மழை, சூறாவளி போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. அதனை எதிர்கொள்வதற்காக வீடுகள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சென்னை காவல் […]
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார். அதேபோல கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் […]
டெக்சாஸின் டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு உலகப் போர் கால விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. விமானங்கள் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் 6 விமான ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போயிங் B-17 குண்டுவீச்சு விமானத்திற்கும் சிறிய விமானத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இரண்டு விமானங்களிலும் உள்ள விமானிகளின் நிலை இன்னும் […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Deputy Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.Eதேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் […]
இன்று அனைத்து பொதுச் சேவை மையங்களும் செயல்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நெல்-॥ பயிர்க் காப்பீடு செய்ய விரும்பும் அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றோர் மற்றும் கடன் பெறாதோர்) பயிர்க் காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற ஏதுவாக இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு […]
ஆன்லைன் மூலம் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்… பான் கார்டு அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. காரணம் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாமல், வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தற்பொழுது, e-PAN […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் […]
பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் […]