சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் Road Ease என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்று பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராத தொகையைச் சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என காவல் […]
தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி கொண்டாப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், […]
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வட்டார இயக்க மேலாளர்கள் & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு […]
தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் அலுவாவில் உள்ள வாழக்குளத்தில் அமைந்துள்ள அதன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி முதல் நான்கு நாள் பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தேங்காய் சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லெட், சட்னி பவுடர், தேங்காய் பர்ஃபி, ஊறுகாய், ஜாம் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வினிகர் மற்றும் நாடா டி கோகோ தயாரிக்கும் ஒருநாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட தேங்காய்ப் பால், வேர்களின் […]
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். பிறகு வடதிசையில் […]
மணிப்பூரில் நேற்று இரவு 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் மொய்ராங் மாவட்டத்தில் இருந்து 75 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை உயிர் சேதமோ, மற்ற பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் மையம் மொய்ராங்கிலிருந்து 75 கிமீ கிழக்கு-தென்கிழக்கே பதிவாகியுள்ளது. இந்த […]
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2022-23-ம் ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய குறியீடு நிர்ணயம் செய்து 2100 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கால்நடையின் மதிப்பீட்டில் அதிக பட்சமாக ரூ.35,000 வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். ரூ.35,000 மதிப்பீட்டிற்கு மேல் உள்ள கால்நடைகளுக்கு கூடுதல் தொகைக்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த […]
அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. போக்குவரத்து விதிகளை மக்கள் கவனத்தில் கொள்ளாமல், மீறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளின் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379A(1)ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2021 ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் […]