குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குக்கு வித் கோமாளி விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய 4வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை யாரும் […]

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்யாதவ்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு – 1(குரூப்- 1) இல்‌ அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌, நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Area Head பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 3 முதல் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வின் (II), 2022 முடிவுகளின் அடிப்படையில் 302 பேர் இறுதியாக தகுதி பெற்றுள்ளனர். விண்ணப்பதாரர்கள் http://www.upsc.gov.in என்ற UPSC இணையதளத்தை அணுகுவதன் மூலமும் முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம். இருப்பினும், தேர்வர்களின் மதிப்பெண்கள் 30 நாட்களுக்கு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் ஒரு கவுன்ட்டர் உள்ளது. தேர்வர்கள் […]

நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த டயல் கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடகாவின் பேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 2.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ தக்காளி திருடப்பட்டதாக போலீஸார் […]

கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுத்தல் மற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் அமலாக்கம் குறித்து டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய மத்திய சட்டம் 2013 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலுமாக களைதல் மற்றும் அவர்களுக்கான விரிவான மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் […]

ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என கல்யாணம் முதல் அமைச்சர் மனோகர் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

ராஜஸ்தானில் உள்ள சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்கம் லட்சக்கணக்கான மக்களின் வருமானத்தை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூடி வந்தனர். சமம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோரை 900 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புப்படுத்தி ராஜஸ்தான் […]

அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து இசைவாணை வழங்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்”முன்னாள்‌ அதிமுக அமைச்சர்கள்‌ மீது உள்ள ஊழல்‌ வழக்குகளில்‌ நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும்‌, மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில்‌ ஒப்புதல்‌ அளிக்குமாறும்‌ தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்களுக்கு 3.7.2023 அன்று […]

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம். மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விதிக்கப்பட்ட 2 […]