சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற 08.07.2023 அன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 […]

நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் […]

நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வுசெய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது. […]

வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. ரூ.8 அதிகரிப்பு என்பது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூடுதல் […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Apprenticeship Training பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 1104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜூலை […]

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் குழுவில் முதல் குழுவினர் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தில் தங்களது முதற்கட்டப் பயிற்சியை முடித்தனர். அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் அடங்கிய குழு பல்வேறு கடற்பகுதியில் மீட்புப் பயிற்சியை மேற்கொண்டது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், விண்கல கேப்சூலின் செயல்பாடு, மருத்துவ உதவி தேவைப்படும் போது […]

ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 300-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையானது நடைபெற்று வருகிறது. […]

செந்தில்‌ பாலாஜி மீது ஊழல்‌ தடுப்பு சட்டத்தின்‌ கீழ்‌ சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்‌ வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய 4ஜி போனான “ஜியோ பாரத்” போனை ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தியது. குறைந்த பட்ஜெட் சாதனங்களுடன் பயனர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இன்னும் 250 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் 2ஜி மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். அது போன்ற மொபைல்கள் இணைய வசதியை பெற முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத்தை அணுகுவது ஒருவரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் […]

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் […]